அடுத்தடுத்து கோப் குழுவில் இருந்து விலகும் உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவும் கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கோப் குழுவில் இருந்து ராஜினாமா செய்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கோப் குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இதை நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த முடிவை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார்.