வீதி விபத்தில் பாடசலை மாணவன் உயிரிழப்பு!

கெக்கிராவ – கனேவல்பொல வீதியில் அம்புல்கஸ்வெவ பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற வீதி விபத்தில் 12 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த சிறுவன் கெக்கிராவ ,நெல்லியகம பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவராவார்.

இவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் இந்த மாணவன் தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது லொறியில் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.