கலால் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

கலால் திணைக்களம் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 38.5 வீத வளர்ச்சி கண்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மது உற்பத்தி 657,000 லீற்றரால் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, எதிர்வரும் காலங்களில் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் விசேட குழுக்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.