யாழ் சொகுசு பேருந்து விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் மீசாலை ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ-9 வீதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியது.

மேலதிக விசாரணை

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.