வாய்ப்புற்று நோயால் தினமும் 3 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் வாய்ப் புற்றுநோயினால் தினமும் 3 பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

இதேவேளை நாளாந்தம் சுமார் 6 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் நிலந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு பற்சிதைவு 

இந்நிலையில் இலங்கையில் 5 வயதுடைய குழந்தைகளில் 63 வீதமானோர் பற்கள் சிதைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலான குழந்தைகள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்குவதில்லை என பாடசாலை சுகாதார ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.