சஜித், அநுர விவாதம் இடம்பெறுமா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று (06) எந்த நேரத்திலும் விவாதம் நடத்த அநுரகுமார திஸாநாயக்க தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினத்திற்கு பின்னர் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் இந்த விவாதத்திற்கு தமது கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.