அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

7 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உருளைக்கிழங்கு, கோதுமை மா, வெள்ளை கௌபீ, சிவப்பு கௌபீ, காய்ந்த மிளகாய், வத்தல்ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலை குறைப்பு இன்று (06) முதல் அமுலுக்கு வரும் என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள்

அதன்படி, உருளைக்கிழங்கு 75 ரூபாவால் குறைக்கப்பட்டு 350 ரூபாவுக்கும், கோதுமை மா 5 ரூபாவால் குறைப்பட்டு 190 ரூபாவுக்கும் வெள்ளை கௌபீ 110 ரூபாவால் குறைப்பட்டு 990 ரூபாவுக்கும் சிவப்பு கௌபீ 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 950 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ந்த மிளகாய் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 780 ரூபாவுக்கும், நெத்தலி 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 930 ரூபாவுக்கும், கடலைப் பருப்பு 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.