யாழில் தோட்டம் செய்யும் பிரதேச செயலக அரச ஊழியர்கள் – குவியும் பாராட்டுக்கள்

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் தலைமையில், இயற்கை பசளையைப் பயன்படுத்தி ஞ்சற்ற மரக்கறிகளை அறுவடை செய்வது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

சண்டிலிப்பாய் உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது பாகற்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய், போன்ற காய்கறிகள்
துபாய் பூசணி, மா, கொடி ஆகியவை அறுவடை செய்யப்பட்டன.

அரசு ஊழியர்களின் இந்த முன்மாதிரியான நடத்தைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.