கிளிநொச்சியில் கால்வாயில் இருந்து சடலம் மீட்பு!

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் நீர் பாசன கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள நீர் தடுப்பு ஏற்படுத்தும் துருசு பகுதியில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.