யாழை மிரட்டும் கொரோனா – வடக்கில் 50 பேருக்கு தொற்று உறுதி

யாழ்.மாவட்டத்தில் 29 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 770 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்படி 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி யாழ். மாவட்டத்தில் 29 பேருக்கு தொற்று. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேருக்கும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேருக்கும், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேருக்கும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.