பாடாசாலைகளை மீள திறக்கும் திகதியை நாடாளுமன்றில் அறிவித்துள்ள கல்வியமைச்சு

நட்டிலுள்ள பாடசாலைகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பாடசாலைகள்
திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை
திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய
கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

80 சதவீதமான ஆசிரியர்களுக்கு தற்போது முதலாம் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

என அவர் குறிப்பிட்டுள்ளார்.