கிளிநொச்சியில் 200 துப்பாக்கி ரவைகளுடன் 5 பேர் கைது!

கிளிநொச்சி – பிரமந்தனாறு மயில்வாகனபுரம் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 200 துப்பாக்கி ரவைகளும் மற்றும் 25 மூட்டைகளில் கட்டப்பட்ட பாவித்த ரவை வேற்றுக்கூடுகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்

தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவளுக்கமைய மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்

சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.