பரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது. வத்தளை, மாபோல பிரதேசத்தில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.