நாட்டை அழிக்க வந்தவர்கள் இவர்கள் – ராஜபக்சவினரை துடைத்தெறிய வேண்டும்: கடும் சீற்றத்தில் தேரர்….!

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுவது போல் சீனாவின் கழிவு கப்பலுக்கு செலுத்திய 6.7 மில்லியன் டொலர் பணம் சிறிய தொகையா என கேட்டுள்ள ஜனசெத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்லே சீலரதன தேரர்,(Seelarathana-Thero) இந்த பணம் ஜோன்ஸ்டனில் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

6.7 மில்லியன் டொலர் இலங்கைக்கு சிறிய தொகை எனவும் நாட்டில் பணம் இருப்பதாகவும் சீனாவின் கழிவு கப்பலுக்கு பணத்தை செலுத்த முடியும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளதாகவும் சீலரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பலாங்கொடை புட்டுபாஹின்ன பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே தேரர் இதனை கூறியுள்ளார்.

இவர்கள் விலங்குகள், பாம்புகள் இவர்களை விரட்டியடிக்க வேண்டும். நாட்டில் பிள்ளைகளுக்கு பால் மாவை கொள்வனவு செய்ய பணமில்லை. 6.7 மில்லியன் டொலரை கழிவு கப்பலுக்கு செலுத்த முடியும் எனக் கூறுகின்றனர்.

இவர்கள் நாட்டை முன்னேற்ற ஆட்சிக்கு வந்தவர்கள் அல்ல. நாட்டை அழிக்க வந்தவர்கள். நாட்டின் அனைத்து வளங்களையும் வெளிநாட்டவருக்கு விற்று சாப்பிடுகின்றனர்.

வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு வந்து நாட்டை ஆட்சி செய்கின்றனர். மக்கள் 69 லட்சம் வாக்குகளை வழங்கினார்கள். 70 லட்சம் வாக்குகளை வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்?.கோட்டாபய, பசில், மகிந்த, நாமல் இவர்களில் எவராக இருந்தாலும் இவர்களுக்கு தூர நோக்கு கிடையாது. இவர்கள் தமது ஏழு தலைமுறைகளுக்கு தேவையான பணத்தை சம்பாதித்துள்ளனர்.

இன்னும் சிறிது நாளில் மக்களையும் விற்று விடுவார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும், இன, சாதி பேதங்கள் இன்றி இணைந்து ராஜபக்சவினரை இந்த நாட்டில் இருந்து துடைத்தெறிய வேண்டும்.

அதனை உழவு இயந்திர சின்னத்தை கொண்டுள்ள ஜனசெத பெரமுனவினாலேயே செய்ய முடியும் எனவும் பத்தரமுல்லே சீலரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.