சமூக ஊடகங்களின் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டு வந்த ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சந்தேக நபர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கும்பலின் பிரதான சந்தேக நபர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சந்தேக நபர்கள் நாள் தோறும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் பணத்தை பறித்து வந்துள்ளனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.