இறைச்சி வாங்க கடைக்கு போன நபர்; வீட்டுக்கு திரும்பியபோது 12 கோடிக்கு அதிபதி!

இந்தியாவின் கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற மனிதர் பனிரெண்டு கோடி ரூபாய்க்கு அதிபதியான ஆச்சர்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

முந்தின நாள் வரைக்கும் தினசரி வாழ்விற்கும் உணவிற்கும் கஷ்டபட்ட மனிதர்கள் அடுத்த நாளில் பெரிய கோடீஸ்வரர்கள் ஆக மாறுவது உண்டு. அதிலும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மட்ட மனிதர்களிடமும் பொருளாதார வீழ்ச்சி நிலவுகிறது.

தினக்கூலி வேலை செய்தவர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அய்மனானம் என்ற கிராமம் உள்ளது . அங்கு வாழ்ந்து வரும் பெயின்டிங் தொழிலாளி சதானந்தன்.

நேற்றைய தினம் காலையில் ஒரு லாட்டரி விற்பவரிடம் இருந்து கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி உள்ளார். அன்றையதினம் அவர் சீட்டு வாங்கிய சில மணி நேரங்கள் கழித்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அதிர்ஷ்டக் குலுக்கலின் மூலமாக சதானந்தன் வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பரிசு வென்ற சதானந்தன் கூறுகையில்,

கடந்த 50 வருடங்களாக பெயின்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலை இறைச்சி வாங்குவதற்காக அருகில் உள்ள சந்தைக்கு சென்றேன். அப்போது சரி ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கலாம் என லாட்டரி விற்பவரிடம் ஒரு சீட்டை வாங்கினேன். அது தற்போது என்னுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளது. என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.