குளவிக் கொட்டுக்கு இலக்கான ஆசிரியர் ஒருவர் மற்றும் 25 மாணவர்கள்….!

லூணுவத்தை தேசியக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட மாணவர்கள் 25 பேர், குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (25-01-2022) செவ்வாய்கிழமை வெலிமடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது, மேற்படி கல்லூரி அருகிலுள்ள கித்துல் மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியரைத் தாக்கத் தொடங்கின. இதையடுத்து, ஏனைய மாணவர்களில் சிலர் அப் பகுதியில் குப்பை, கூளங்களை எரியூட்டி, புகையை எழுப்பினர்.

இந்நிலையில், குளவிகள் அடங்கியதும், குளவித் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் உள்ளிட்ட 25 மாணவர்கள், ஊவா – பரணகமை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர்.

மேலும் குளிவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில் 8 மாணவர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஏனையோர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.