பாடசாலை மாணவியை பலியெடுத்த கொரோனா…!

புத்தளம் – நாத்தாண்டியவில் உள்ள தேசிய பாடசாலையொன்றில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தப்போவ பகுதியைச் சேர்ந்த 11 வயதான மாணவி என கூறப்படுகின்றது. குறித்த மாணவி சுமார் இரண்டு நாட்கள் மாரவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கமைய, மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.