யாழில் அயல்வீட்டு பெண்ணுடன் தாயிடம் சிக்கிய மகன்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இறுதிப் பாட பரீட்சை நடக்கவிருந்த சமயத்தில் தாயாரின் தாக்குதலில் படுகாயமடைந்த 21 வயது மகனும் 27 வயது அயல் வீட்டு குடும்பப் பெண்ணும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் நாவலர் வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. பிரபல தனியார் பாடசாலையில் கல்வி கற்று க.பொ.த உயர்தரப் பரீட்சை இரண்டாவது தடவையாக எடுக்கவிருந்த நிலையில் தாயாரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தாயார் மற்றும் தந்தை அலுவலகத்திற்கு சென்ற சமயம் தனது வீட்டுக்கு அருகில் வாழும் இளம் குடும்பப் பெண்ணுடன் அவர் காதலர் தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அதனை அறித்து அங்கு விரைந்து வந்த தாய், இருவரையும் கடுமையாகத் தாக்கியதை அடுத்து இருவரும் வெவ்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

அதேவேளை தாக்குதலுக்குள்ளான பெண் கணவனை பிரிந்து வாழ்ந்துவருவதாக மேலும் கூறப்படுகின்றது.