மட்டக்களப்பு தமிழ் இளைஞனின் விபரீத முடிவால் பெரும் துயரம்….!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கன்னன்குடா பிரதேசத்தில் 17 வயதுடைய இளைஞன் சந்திரகுமார் டிலக்ஷன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ தினத்தன்று அவரின் தாயார் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் பூட்டியிருந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் வீட்டின் கதவினை திறந்து உட்சென்றுள்ளார்.

இதன் போது குறித்த இளைஞன் வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தாக பொலிஸாரின் ஆரம்பக்கட்;ட விசாரணையின போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டார்.

அத்துடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்