யாழ்.திருநெல்வேலியில் கை குண்டு மீட்பு; தீவிர கண்காணிப்பில் பொலிஸார்……!

யாழ்.திருநெல்வேலி – கேணியடி பகுதியில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

திருநெல்வேலி – கேணியடி பகுதியிலுள்ள காணியொன்றில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்டியபோது இக் கை குண்டு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து விசேட அதிரடிப்படையின் உதவியுடன் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிடங்கை வெட்டும்போது ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோப்பாய் பொலிசார் கண்காணித்து வருகின்றதாக மேலும் கூறப்படுகின்றது