உலக நாடுகளுக்கு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதலை நடத்தி வரும் நிலையில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக தாக்குதலை தொடுத்து வருகின்றது. ரஷ்யாவின் இந்த படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த டொயோட்டா (Toyota), ஃபோக்ஸ்வாகன் (Volkswagen), ஜாகுவார் (Jaguar), லேண்ட் ரோவர் (Land Rover), மெர்செடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), ஃபோர்ட் (Ford), பி.எம்.டபில்யூ (BMW) ஆகிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன.  

இதனையடுத்து வெளிநாட்டு அந்நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷ்யா பகிரங்கமாக மிரட்டியுள்ளது.

இந்நிலையில், ஹுண்டாய் நிறுவனம், போரின் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகவும், விரைவில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ரெனால்ட், அவ்டோவாஸ் போன்ற நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளன. 

ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த மிரட்டல் உலக நாடுகளை அச்சம்கொள்ள செய்துள்ளது.