க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் இன்று (06) தோற்ற முடியாமல்போன பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.