எரிபொருளுக்காக வரிசையில் நிப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பொரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபடுவதால் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மகரம பகுதியில் எரிபொருளுக்காக வரசையில் காத்திருந்தவரிடம் நபர் ஒருவர் நான் உங்களுக்கு எரிபொருள் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கிவிட்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எனவே இவ்வாறான சந்தேக நபர்களிடம் இருந்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியபடுத்துமாறு தெரிவித்துள்ளனர்.