யாழில் குடிபோதையில் பயணிகள் பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி கைது!

குடிபோதையில் பயணிகள் பேருந்தை ஓட்டிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மாணிப்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.

மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மானிப்பாய் பொலிசார் குறித்த பேருந்தை சண்டிலிப்பாய் கட்டுடா பகுதியில் மறித்து சாரதியை சோதனையிட்டனர்.

சாரதி மதுபோதையில் இருந்ததை உறுதிப்படுத்தியதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மற்றொரு டிரைவரை அழைத்து பேருந்தை