யாழ்.தொண்டைமானாற்றில் முதலைகள் அபாயத்தை தவிர்க்க இரும்பு வேலி அமைப்பு..!

யாழ். தொண்டைமானாற்றில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், செல்வச்சந்நிதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குளித்தலையை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில், முருகப்பெருமானை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த இரும்பு வேலி கோயிலுக்கு பின்புறம் உள்ள ஆற்றில் முதலைகள் வராமல் இருக்க, அடியார்கள் அச்சமின்றி குளித்து, முதலைகளை ஆற்றில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொண்டைமான் ஆற்றில் முதலைகள் காணப்படுவதால், குளிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சந்நிதியான் கோவில் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது.