மின் வெட்டு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!

நாளை (6) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நாட்டில் ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை முதல் 09 ஆம் திகதி வரை மாலை 06.00 மணி முதல் இரவு வரை A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, S, T, U, V,W வலயங்களுக்கு 09.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணி நேரம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.