யாழில் இந்திய மீனவர்கள் அதிரடி கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பகுதியில் ரோந்து வந்த கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு நீர்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மினவாஸ் ஜெயதாபட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.