யாழில் தாய்ப்பால் புரையேறிய நிலையில் 10 மாத குழந்தை பலி!

யாழ்ப்பாணம் வடக்கு மாமுனை பகுதியில் பால்புரையேறியதில் 10 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பால் கொடுக்கும்போது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தை அம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து குழந்தை சிகிச்செ பலனின்றி உயிரிழந்துள்ளது.

மேலும், மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா நடத்துவார்.