பிறந்த குழந்தையை வடிகாணில் வீசிய தாய் கைது!

பிறந்த குழந்தையை வடிகாணில் வீசிய தாயொருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீழ்ப்பிரிவு வட்டகொடை நிலையத்தைச் சேர்ந்த 21 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடிகாணில் இருந்து குழந்தை மீட்கப்பட்டு உயிருடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.