யாழ். கடற்கரையில் கரையொதிங்கிய ஆண் ஒருவருடைய சடலம் : விசாரணைகள் தீவிரம்!

யாழில் உள்ள கடற்கரையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று யாழ்.மாதகல் – திருவடிநிலை கடலிருந்து இச்சடலம் மிட்கப்பட்டுள்ளது.

இச்சடலம் – திருவடிநிலை கடலில் அமைந்துள்ள இறால் தொட்டிலில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.