யாழில் புகையிரதத்தில் மோதி சம்பவ இடத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்திலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.