இலங்கையில் இருந்து மேலும் ஐவர் தமிழகத்தினுள் அகதிகளாக தஞ்சம்!

இலங்கையில் இருந்து மேலும் 05 பேர் அதாவது ஒரு குடும்பம் திழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டில் இரண்டு நாட்களாக உணவின்றி தவித்து நின்றுள்ளார்கள்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த கடோலர காவல் படையினர் அவர்களை மீட்டு மண்டபம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆறு மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளும்போது தாம் இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுக்க முயலாததால் அகதியாய் தமிழகத்திற்கு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 174 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.