தகராறில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி : சிறுவன் உட்பட இருவர் காயம்!

காலி யக்கலமுல்ல மாத்தரை, களுவலகல பிரதேசத்தில் உள்ள கருவாய் வாடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 வயது சிறுவனும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக யகலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதான வெடிகருகே சமன் குமார என்பவர் கருவா வாடிக்குள் கருவா உமியை வெட்டிக் கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட நபர் உரகஹ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கொலைச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் யக்கலமுல்லை களுவலகல பிரதேசத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தோல் பதனிடும் தொழிற்சாலையில் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 5 வயது சிறுவனுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த 30 வயதுடைய ஒருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது. அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

5 வயதுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காலி கராபிட்டிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை அச்சுறுத்திய துப்பாக்கிதாரிகள் மூவர் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு தோட்டங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

சம்பவம் தொடர்பில் யக்கலமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.