இறைச்சி மீன்களை தவிர்த்த இலங்கையிலுள்ள வறுமையான குடும்பங்கள்!

இலங்கையில் வறிய குடும்பங்கள் தமது உணவில் இருந்து இறைச்சியை குறைத்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நோயாளிகளும் குறைவான மருந்துகளை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 2022 இல் 200 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலை 50 வீதத்தினாலும் ஏனைய பொருட்களின் விலை 70 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது.

50% குடும்பங்கள் தங்கள் உணவில் இறைச்சி மற்றும் மீன்களை விட்டுவிட்டன.

11 சதவீதம் பேர் புரத உணவை முற்றிலுமாகத் தவிர்த்தனர். பெருந்தோட்டத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீனவ மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.