யாழ். பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு!

யாழ் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்க்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ,இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த பெண் ஒருவரின் சடலம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாதையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சடலத்தை உரியவர்கள் அடையாளம் காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.