யாழில் சிறுமி குளிக்கும் போது இளைஞன் செய்த செயல் !

17 வயது சிறுமி குளித்தபோது மறைத்து வைத்து 21 வயது இளைஞர் ஒருவர் தனது போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இச்சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதனை அவதானித்த கிராம மக்கள் இளைஞனை பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குளித்துக் கொண்டிருந்த சிறுமி தற்செயலாக அந்த வாலிபர் வீடியோ எடுப்பதை பார்த்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து வீடியோ எடுத்த இளைஞரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வட்டுக்கோட்டை அராலியைச் சேர்ந்த இளைஞரே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.