யாழ் பல்கலையின் பெண்கள் விடுதியின் இன்றைய நிலை!

யாழ்.மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், நேற்று யாழ்.பல்கலைக்கழக மகளிர் விடுதியின் முன்பகுதி மழைநீரால் நிரம்பியுள்ளது.

மழைநீர் வடிகால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் வெளியேற வழியின்றி அப்பகுதியில் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

இதை சரி செய்தால் மட்டுமே மழையை அகற்ற முடியும். மேலும், மேற்படி பெண்கள் விடுதியில் உள்ள மாணவிகள் ஈர உடையுடன் விடுதிக்கு செல்கின்றனர்.