யாழில் மோப்பநாய்களுடன் வீதியில் இறங்கிய பொலிஸார் : வெளியான காரணம்!

வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, மோப்ப நாய் சகிதம் பருத்துறை பொலிஸார் வியாழக்கிழமை (10) பிற்பகல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பருத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பியான்டா அமரசிங்க தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பருத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து பருத்துறை மார்க்கெட், பருத்துறை முச்சக்கரவண்டி பக்கம், மண்டிகை மார்க்கெட், மண்டிகை ஆஸ்பத்திரி ரோடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.