வயல்வெளியில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஒருவர் பலி !

வயல்வெளியில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எஹலியகொட, பஹலகம, ரிலகும்புர வயல் பகுதியில் நேற்று (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விவசாய விளைபொருட்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவே இந்த மின்வேலி அமைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தில் 59 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக எஹலியகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.