பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் பலி !

நைஜீரியாவின் ஓகுன் மாநிலத்தில் பல்லியால் 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது.

ஜோன் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் மொத்தமாக உயிர் இழந்தனர்.

சாமுவேல் வசித்த வீட்டில் இருந்து சத்தம் வராததால், அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, ​​ஒவ்வொரு அறையிலும் சாமுவேல் இறந்து கிடந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

நைஜீரிய பொலிஸாரின் விசாரணையில் இரவு உணவு உண்ட பின்னர் அவர்கள் உயிரிழந்ததாகவும், உணவில் விஷம் கலந்ததே மரணத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

அக்கம்பக்கத்தினர் வீட்டைச் சோதித்தபோது சாமுவேல் மற்றும் பலர் இரவு உணவிற்கு எடுத்துச் சென்ற சூப் பானையில் இறந்து கிடந்த பல்லி இருப்பதைக் கண்டதாகவும், பல்லிதான் உயிரிழப்புக்குக் காரணம் என்றும் நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.