அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்.!

கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக அமெரிக்கா சென்ற இந்தியாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முத்தனா (வயது 49) கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் விடுமுறைக்கு சென்றுள்ளார்.

11 பேர் சுற்றுலா சென்ற நிலையில், 3 பேர் உறைந்த நதியில் நடந்து சென்று புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதற்கிடையே உறைந்திருந்த ஆற்றில் திடீரென வெடிச்சத்தம் ஏற்பட்டு 3 பேரும் உறைந்த ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுபற்றி மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பல மணி நேரத்துக்கு பிறகு சடலங்கள் மீட்கப்பட்டன.