இலங்கையில் சுமார் 120,000 பேர் போதைப்பொருள் பாவனையாளர்கள் ! வெளியான அதிர்ச்சி தகவல் !

இலங்கையில் சுமார் 120,000 பேர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், கிட்டத்தட்ட 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துகின்றனர் என அதன் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்தார்.

பொதுவாக, சிகரெட், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பெரும்பாலான ஹெரோயின் மற்றும் மரிஜுவானா பயன்படுத்துபவர்கள் சிகிச்சை பெறாமல் போதைப்பொருள் பாவனையை நிறுத்துவதாக நாணயக்கார கூறினார்.