இரவு வேளையில் கோவிலை உடைத்து அம்மனின் ஆபரணங்கள் கொள்ளை !

நானுஓயா, டெஸ்போட் உட்பிரிவு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மனின் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கோவிலில் உள்ள வங்கிக் கணக்கில் இருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினரால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஆலயம் முன்னர் உடைக்கப்பட்டு தங்க நகைகள் மற்றும் உண்டியல்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நிர்வாக சபை குற்றம் சாட்டியுள்ளது.