யாழில் 100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கவுள்ள மைதானம் !

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச விளையாட்டு மைதானத்தை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இளைஞர்களை பலப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்துவது மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன் போது யாழ்ப்பாணம் மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் மைதானத்திற்காக ஏற்கனவே 50 ஏக்கர் ஒதுக்கப்பட்ட நிலையில் 100 ஏக்கர் வரை தேவைப்படுவதாகவும் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டந்தோறும் ஜிம்னாஸ்டிக் மைதானம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சென், யாழ்.மாவட்ட பதில் தலைவர் மருதுலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் யாழ் மாவட்ட பிரதம திட்டமிடல் பணிப்பாளர் நிக்லஸ்பிள்ளை மற்றும் வடமாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.