யாழில் விரலில் உள்ள மோதிரத்தை எடுக்க முடியாததால் விரலோடு வெட்டிச் சென்ற சம்பம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்று யாழ் பருத்தித்துறை தம்பசிட்டி பூவக்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பகுதியைசேர்ந்த நபர் ஒருவரின் மோதிரத்தையே கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த மூன்று கொள்ளையர்கள், அவரது கையிலிருந்த மோதிரத்தை திருடிச் சென்று, மற்ற மோதிரத்தை கழற்ற முடியாமல், அவரது விரலை அறுத்து, மோதிரத்தை திருடிச் சென்றனர்.
இந்த நிலையில், காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.