யாழில் வீட்டில் இருந்து வெளியில் வந்த பெண்ணிற்கு நடந்த சோகம் !

யாழில் வீட்டில் இருந்து வெளியில் வந்த பெண் ஒருவரின் 12 பவுண் தாலிகொடியை செந்தேகநபர்கள் அறுத்துச்சென்றுள்ளதாக பொலிஸாரிடம் அப்பெண் புகாரளித்துள்ளார்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – கொல்லன்கலட்டியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது, ​​பின்பக்க கதவை உடைத்து, பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடியை திருடிச் சென்றனர்.

குடும்பத்தினர் திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது தாலிக்கொடி திருடு போனது தெரிந்தது.

இதனையடுத்து அப்பெண் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.