யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய களமிறங்கும் கனடா தமிழர்கள் !

கனடாவில் வாழும் இலங்கையர்கள் சிலர் யாழ்ப்பாணத்தில் சுற்றுலா தொடர்பான துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்.

காரைநகர் பிரதேசத்தை சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்றை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தவிர, நெடுந்தீவு, மன்னார், கப்பிட்டி, கொழும்பு மற்றும் காலியிலிருந்து திருகோணமலை வரையிலான கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.