பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவரின் தங்க நகைகள் மாயம்!

களுத்துறை வடக்கில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய பெண்ணான லின்டா பிரவ்மன் என்ற  பெண் கொள்வனவு செய்த சுமார் 18 ஆயிரத்து 500 ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான தங்க வலையல், காதணி உட்பட ஆபரண தொகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

சுற்றுலா பயணியான பெண் களுத்துறை வடக்கில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்து  முச்சக்கர வண்டியில் அளுத்கம பிரதேசத்திற்கு சென்று பிரதான நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்துள்ளார்.மேலும் குறித்த பெண் நகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் இரு சுற்றுலா வழிகாட்டிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி 83 லட்சத்திற்கு மேல் என தெரிய வருகின்றது எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.