மகளுக்காக தாய் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல்!

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தன் 17 வயதான மகளுக்கு தாய் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி சிறுமிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் சத்திரசிகிச்சை செய்த வைத்திய குழுவினரின் புகைப்படத்தை வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார் .